close
Choose your channels

எவன் வந்தாலும் சரி, நான் பாத்துக்கிறேன்: கவுதம் மேனனின் 'ஜோஸ்வா' டிரைலர்

Thursday, November 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகிவரும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சேஸிங் காட்சிகள், கௌதம் மேனனின் வழக்கமான ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சஸ்பென்ஸ் என அனைத்து அம்சங்களும் உள்ள இந்த படத்தின் டிரைலர் விறுவிறுப்பாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் நாயகி மிகப் பொருத்தமாகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் இந்தப் படம் நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை அமைக்கப்பட்டிருந்தாலும் ஹீரோ வருணின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக ‘நீ சரி என்று சொல், எவன் வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்’ என்று வருண் பேசும் வசனம் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தர்புகா சிவாவின் பின்னணி இசை, ஆக்சன் படத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது.  

கவுதம் மேனன் இயக்கத்தில், வருண் நடிப்பில், எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவில்,  தர்புகா சிவா இசையமைப்பில், அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.