close
Choose your channels

ஜூலியின் காதலர் கூறிய திடுக்கிடும் தகவல்!

Sunday, December 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் நேற்று பிக்பாஸ் ஜூலி புகார் அளித்த நிலையில் காவல்துறையின் விசாரணையில் ஜூலியின் காதலன் மனிஷ் கூறிய திடுக்கிடும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஜூலி. அதன்பின் மாடலிங், திரைப்பட வாய்ப்புகள் பெற்று முன்னேறி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மனிஷ் என்பவரை ஜூலி காதலித்து வந்தார். காதலிக்கும் போது அவர் மனிஷ்க்கு விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென ஜூலி நேற்று சென்னை அண்ணா நகரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ’தன்னுடைய காதலர் மனிஷ் நெருக்கமாக பழகிவிட்டு தற்போது திடீரென தன்னை திருமணம் செய்த மறுப்பதாக கூறி புகார் அளித்தார். மேலும் தான் பரிசாக அளித்த பொருள்களையும் திருப்பி வாங்கி தர வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் மனிஷ் என்பவரை வரவழைத்து விசாரித்தபோது ஜூலி கொடுத்த அனைத்து பொருட்களையும் காவல்துறையினர் முன் ஒப்படைத்தார். மேலும் ஜூலியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் ஒப்படைத்துள்ளார். அதனை அடுத்து அவர் கூறியது தான் அதிர்ச்சியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலிக்கு வேறு ஒரு காதலன் இருப்பதாகவும் அதனால் தன்னிடம் அவர் கடந்த சில வாரங்களாக பேசவில்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே மனிஷை காதலிப்பதற்கு முன்பு ஜூலி வேறு ஒருவரை காதலித்து அவருடன் பிரேக்கப் ஆகிவிட்ட நிலையில் தான் மனிஷை காதலித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மனிஷை உடனும் பிரேக் அப் ஆகி வேறு ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாக ஜூலி பழகி வருவதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து போலீசார் இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.