ஜுன்- ரேஷன் பொருட்கள் வழங்குவதில் மாற்றம்… வெளியான புது அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நாட்களில் ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8-12 மணி வரை இயங்கும் எனத் தமிழக அரசு அறிவித்து பொருட்களை விநியோகம் செய்து வந்தது. இந்நிலையிலல் ஜுன் மாதத்தில் வழங்கப்படும் அனைத்து ரேஷன் பொருட்களுக்கும் டோக்கன் முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

முன்னதாக நலத் திட்டங்களை வழங்கும்போது டோக்கன் முறை பின்பற்றப்பட்டது. தற்போது அதே முறையைப் பின்பற்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனால் ஜுன் மாத ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக 1-4 ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் டோக்கன் வழங்குவார்கள். அடுத்து ஜுன் 5 ஆம் தேதி முதல் அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தங்களது ரேஷன் பொருட்களைச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கொரோனா பரவலை முழுமையாகக் குறைக்க முடியும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது. மேலும் ஆன்லைனில் ரேஷன் பொருட்களை ஆர்டர் செய்வோர்களுக்கு காலை 7-6 மணிவரை பொருட்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

முன்னதாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கப்பட்டது. அதையடுத்து தற்போது 13 சமையல் பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட இருப்பதாகவும் அதோடு மீண்டும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

More News

1-8 ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ்... மீண்டும் பள்ளி திறப்பு எப்போது?

தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் அனைத்து மாணவர்களும் (2020-202) இந்தக் கல்வியாண்டில் தேர்ச்சிப் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்து உள்ளார்.

ரூ.11 லட்சம் அபராதம்… பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா திடீர் விலகல்!

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார்.

தப்புல சின்னத்தப்பு, பெரிய தப்பெல்லாம் கிடையாது: ஜகமே தந்திரம் டிரைலர்

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது

5ஜி சேவையை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ரஜினி பட நடிகை!

இந்தியாவில் 5ஜி சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் வழக்குத் தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஊரடங்கால் காணாமல் போன பாக்டீரியா… ஆச்சர்யத் தகவல்!

கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர்.