3D கண்ணாடி ஆர்டர் பண்ணிட்டேன்: விஜய்சங்கரை கிண்டல் செய்தாரா அம்பத்தி ராயுடு?

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விராத் கோஹ்லி, தோனி, ரோஹித்சர்மா ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்காதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. 4வது பேட்ஸ்மேன் இடத்திற்கு அதிக கடும் போட்டி இருந்தாலும் அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருந்ததாகவே கருதப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு விஜய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

'ஐபிஎல் போட்டியில் விளையாடும் தன்மையை கணக்கில் எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்றும், அம்பத்தி ராயுடுவுக்கு ஒருசில வாய்ப்புகள் கொடுத்தோம். இருப்பினும் 4வது இடத்திற்கு விஜய்சங்கர் பெயர் ஆலோசிக்கப்பட்டது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என முப்பரிணாமங்களில் விஜய்சங்கர் சிறந்து விளங்குவதால் அவர் தேர்வு செய்யப்பட்டார்' என தேர்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

முப்பரிணாமங்களில் சிறந்தவர் விஜய்சங்கர் என்று கூறியதை குறிப்பிடும் வகையில் அம்பத்தி ராயுடு தனது சமூக வலைத்தளத்தில், 'உலகக்கோப்பையை பார்க்க 3D கண்ணடிகள் ஆர்டர் செய்துள்ளேன்' என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். ராயுடுவின் இந்த பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

பாறை இடுக்கில் கிடந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம்! நடந்தது என்ன? பதற வைக்கும் சம்பவம்!

வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்த இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில்

எதையும் சந்திக்க தயார்! ஐடி ரெய்டுக்கு பின் கனிமொழி பேட்டி!

தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கியில் இன்று கடன் வாங்கினால் நாளை தள்ளுபடி: உதயநிதி ஸ்டாலின்

கூட்டுறவு வங்கியில் இன்றே அனைவரும் கடன் வாங்குங்கள். நாளை தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கடன் தள்ளுபடி செய்யப்படும்

டிக்டாக் வீடியோ பார்த்த வாலிபர் பரிதாப பலி! நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள புதியதாக ஒரு கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கருப்பையே இல்லாத பெண்கள்: ஒரு கிராமத்தில் நடக்கும் அதிர்ச்சி தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட பாதி பெண்கள் கருப்பை இல்லாமல் உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது