கமல்ஹாசனை அடுத்து நந்தினிக்காக குரல் கொடுத்த திரையுலக பிரமுகர்கள்

  • IndiaGlitz, [Sunday,February 05 2017]

சமீபத்தில் அரியலூர் அருகே நந்தினி என்ற 17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் நந்தினி கொலைக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அவரது பதிவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது கோலிவுட் திரையுலகின் மேலும் இரண்டு பிரமுகர்கள் நந்தினிக்காக குரல் கொடுத்துள்ளனர். இந்த இருவரும் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தங்கள் பெரும் ஆதரவை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தினிக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷும், 'இத்தகைய காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகளை கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி வழங்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி உள்பட பலர் இந்த அரக்கத்தனமான செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் வேட்புமனு மீது தேர்தல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதை நேற்று பார்த்தோம். இவரது வேட்புமனுவை உலகநாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

பணத்தை விட சக்தி உள்ளது எது தெரியுமா? ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. இமயமலை உள்பட பல ஆன்மீக தலங்களுக்கு அவர் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்....

சென்னை மெரீனா தடை உத்தரவு வாபஸ். காவல்துறை அறிவிப்பு

சென்னை மெரீனாவில் சமீபத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சிப்போராட்டத்தின் கடைசி தினத்தன்று ஒருசில சமூக விரோதிகளால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையால் மெரீனாவை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. காவல்நிலையம் உள்பட பல இடங்களில் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டது...

கேரள சூர்யா ரசிகர்களின் போலீஸ் புகார்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. முதல் இரண்டு பாகங்கள் நல்ல வெற்றியை பெற்றதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

'பைரவா' படக்குழுவுக்கு இளையதளபதியின் இனிய பரிசு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றையும் மீறி விநியோகிஸ்தர்களுக்கு லாபம் தந்த படங்களில் ஒன்றாக ''பைரவா' இருந்ததால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்...