close
Choose your channels

சூப்பர் ஸ்டார் படம், மூன்று மொழிகள்: ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்!

Tuesday, October 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் மூன்று மொழி பிரம்மாண்டமான திரைப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு கிடைத்துள்ளது

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். அதன் பின்னர் ’ஆரஞ்சு மிட்டாய்’ ’ஒரு நாள் கூத்து’ ’உள்குத்து’ ’தொண்டன்’ ’மான்ஸ்டர்’ ’நாடோடிகள் 2’ உள்பட பல திரைப்படங்களில் அவர் இசையமைத்துள்ளார்

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் இசையமைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக பல கோடி ரூபாயில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.