ஜுவான்டஸ் டிபாலாக்கு கொரோனா பாதிப்பா..?!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜுவான்டஸ் அணியின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தோற்றானது உலகம் முழுவதும் 123 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஐரோப்பா கண்டத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இத்தாலியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று வரை 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஜூவான்டஸுக்கும் இன்டெர்மிலனுக்கும் இடையே இத்தாலியின் ஆலியன்ஸ் மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரசிகர்கள் யாரும் மைதானத்தில் அனுமதிக்கப்படவில்லை. அந்த போட்டியில் ஜுவான்டஸ் அணி வெற்றி பெற்றது. ஆரோன் ராம்சேவும், பவ்லோ டிபாலாவும் தலா ஒரு கோல் அடித்தனர்.
அதன் பிறகு கடந்த புதன் கிழமை ஜுவான்டஸ் அணியின் சிறந்த தடுப்பு ஆட்டக்காரர் டேனியல் ருகாணிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் சோதனை செய்யப்பட்டு பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இதனால் அணியில் உள்ள 121 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இன்று அந்த அணியை சேர்ந்த டிபாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த தகவல்கள் குறித்து ஜுவான்டஸ் அணியாது எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments