ஜோதிகாவின் ஐம்பதும், சூர்யாவின் முப்பந்தைந்தும்

  • IndiaGlitz, [Friday,July 03 2015]

எட்டு வருடங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆன ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படம் இன்று 50வது நாளை கொண்டாடி வருகின்றது. இந்த நாளில் ரசிகர்களுக்கும், விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது நன்றியை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது.

ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படம் 50வது நாளை அடைந்துள்ள நிலையில் சூர்யாவின் 'மாஸ்' திரைப்படமும் இன்று 35வது நாளை கொண்டாடி வருகின்றது. ஒரே குடும்பத்தில் உள்ள இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யா நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்த 'ஹைக்கூ' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இவ்வருடம் சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

More News

கார்த்தி-தமன்னா படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

நாகார்ஜுனா-கார்த்தி நடிக்கவிருக்கும் பிரமாண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்...

கமல்ஹாசனுடன் இணைகிறார் பாபிசிம்ஹா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. கமல்ஹாசனின் 'உத்தம...

அஜீத்-ஸ்ருதிஹாசன் துபாய் பயணம்

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக 'தல...

திருமணம் ஆகி ஒன்றரை வருடத்தில் விவாகரத்து கோரும் நடிகர் கிருஷ்ணா

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகரும், பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான கிருஷ்ணா தனது மனைவியிடமிருந்து...

கமல் வழியில் ரஜினி

’மெட்ராஸ்’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் ...