மீண்டும் போலீஸ் கேரக்டரில் ஜோதிகா!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

நடிகை ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ஜாக்பாட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டு அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஜோதிகாவும் ரேவதியும் போலீஸ் உடையில் இருப்பதால் இருவரும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜோதிகா சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

ஜோதிகா, ரேவதி,யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது.
 

More News

சாமியார் ஆசாராம் பாபுவை அடுத்து அவரது மகனுக்கும் ஆயுள் தண்டனை!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மற்றும் மகன் நாராயணன் சாய் ஆகியோர்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு

அதிரடி ஆட்டத்துடன் விடை பெற்ற வார்னர்: இனி என்ன ஆகும் சன்ரைசர்ஸ்?

நேற்று பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 56 பந்துகளில் 81 ரன்கள் அதிரடியாக அடித்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர்.

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியின் முதல் அதிரடி உத்தரவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே நிர்வாகிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது.

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் அதர்வா, ஜீவா படங்கள்

தமிழ் திரையுலகின் இரண்டு இளையதலைமுறை நடிகர்களான அதர்வா மற்றும் ஜீவா ஆகியோர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இரண்டு நடிகைகள் கைது!

நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில மாதங்களாக 'மீடூ'வின் மூலம் கூறி வருவதால் பல விஐபிக்களின் முகத்திரை கிழிந்து வருகிறது.