செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி ஜோடியாக 2 நடிகைகள்?

  • IndiaGlitz, [Friday,August 24 2018]

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் என மல்டி ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்த படம் 'செக்க சிவந்த வானம்'. இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படம் அடுத்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டர் பெயர்களும், ஒவ்வொரு நடிகருக்கும் ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த தகவலும் வெளிவந்தது. இதன்படி அரவிந்தசாமிக்கு ஜோடியாக ஜோதிகாவும், சிம்புவுக்கு ஜோடியாக டயானாவும், அருண்விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளதாக விளம்பர போஸ்டர்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அரவிந்தசாமிக்கு அதிதிராவ் ஹைதியும் ஜோடியாக நடித்துள்ளது தெரியவந்துள்ளது. வரதன் மற்றும் பார்வதி கேரக்டர்கள் அரவிந்தசாமி, அதிதிராவ் நடித்துள்ளதாக புதிய போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளதால் அரவிந்தசாமிக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சந்தோஷ் சிவனின் சொக்க வைக்கும் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சர்கார் இசை வெளியீடு தேதி குறித்த தகவல்

வரும் அக்டோபர் 2ஆம் தேதி 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

அஜித்தின் 'விஸ்வாசம்' மும்பையில் நடக்கும் கதையா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி நாள் முழுவதும் சமூக வலைத்தளங்களின் டிரெண்டில் இருந்தது. 

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்: ஒரு முன்னோட்டம்

சிபிஐ அதிகாரியாக நயன்தாராவுக்கும், சைக்கோ கொலைகாரனாக அனுராக் காஷ்யப்புக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை.

கேரள வெள்ள நிவாரண நிதியாக லைகா நிறுவனம் தந்த தொகை

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து அம்மாநில மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர இந்தியா முழுவதிலும் இருந்து நிதிகள் குவிந்து வருகிறது.

ஜோதிகாவுக்கு தமிழக அரசு வழங்கிய பெருமை மிகுந்த பதவி

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த  பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.