close
Choose your channels

கார்த்தி-ஜோதிகா நடிக்கும் படத்தின் முக்கிய தகவல்

Sunday, April 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தியும் அவருடைய அண்ணி ஜோதிகாவும் ஒரே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்பதையும் இந்த படத்தை 'த்ரிஷ்யம்' பட இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் உடன்பிறந்த சகோதர, சகோதரியாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜோதிகாவின் சகோதரர் சுராஜ் இந்த படத்தை தயாரிக்கின்றார். இவர் இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா தற்போது 'குலேபகாவலி' இயக்குனர் கண்ணன் படத்தில் நடித்து வருகிறார். இருவரும் தங்களது படத்தை முடித்தபின்னர் ஜித்துஜோசப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.