தஞ்சை மருத்துவமனை விவகாரம்: ஜோதிகாவின் பாராட்டுக்குரிய செயல்!

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, ‘தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அந்த மருத்துவமனை பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை பார்த்ததாகவும் கோவில்களுக்கு செலவழிப்பது போல மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கும் செலவு செய்யவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வந்தது. ஒருசிலர் அவர் பேசியதன் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ஜோதிகா கூறியதாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் ஜோதிகா தான் குறிப்பிட்ட அதே தஞ்சை மருத்துவமனைக்கு தற்போது ரூ.25 நன்கொடை அளித்துள்ளார்.

உரிய வசதிகள் இன்றி இருந்த தஞ்சை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ.25 லட்சம் நன்கொடையாக நடிகை ஜோதிகா வழங்கியுள்ளார். மேலும் குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் நடிகை ஜோதிகா உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து ஜோதிகாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More News

சமூகவலைத் தளத்தில் உலாவும் சதிக்கோட்பாடு!!! திணறும் டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள்!!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக பயங்கரச் சதித்திட்டங்கள் தீட்டப்படுகிறது என்ற கருத்தை வலுவாக நம்பி, அப்படியான கருத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதித்து

கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான டேபிள் டாப் ரன்வே!!! பதற வைக்கும் விபத்து பின்னணி!!!

நேற்று துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 விமானம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது 35 அடி தாழ்வான பள்ளத்தில் விழுந்ததால்

தங்கக்கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வரிடம் அதிகச் செல்வாக்கு பெற்றிருந்தாரா??? என்ஐஏவின் அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவையே புரட்டிப்போடும் விதமாக கடந்த மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு ஒரு பார்சல் வந்தது.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் போலீஸ் கான்ஸ்டபிள்: அதிர்ச்சி காரணம்

திருச்சி அருகே 26 வயதே ஆன இளம் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

வாழையிலையில் காஸ்ட்யூம்: அஜித் பட பேபி நடிகையின் அசத்தல் போட்டோஷூட்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' என்ற திரைப்படத்தில் அஜித் நயன்தாரா தம்பதியின் மகளாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். இவர் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம்