close
Choose your channels

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்!

Saturday, July 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்துவரும் 40வது திரைப்படமான ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சூர்யாவின் பிறந்த நாளை அடுத்து படக்குழுவினர் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். இதனை அடுத்து படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை ஜோதிகாவும் கலந்துகொண்ட நிலையில் அவரை படக்குழுவினர் வரவெற்றனர்.

சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், ரத்தினவேலு ஒளிப்பதிவில் உருவாகி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் அவர் அடுத்த படமான ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.