சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,July 24 2021]

சூர்யா நடித்துவரும் 40வது திரைப்படமான ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சூர்யாவின் பிறந்த நாளை அடுத்து படக்குழுவினர் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். இதனை அடுத்து படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை ஜோதிகாவும் கலந்துகொண்ட நிலையில் அவரை படக்குழுவினர் வரவெற்றனர்.

சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், ரத்தினவேலு ஒளிப்பதிவில் உருவாகி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் அவர் அடுத்த படமான ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு!

நான் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் முன்னிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்!

நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா தம்பதிக்கு நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு… நன்மைகள் குறித்து விளக்கும் சிறப்பு வீடியோ!

“கோடி நன்மைதரும் ஆடி மாதம்” என்று நமது முன்னோர்கள் ஆடி மாதத்தைப் பற்றி சிறப்பாகக் கூறுகின்றனர்.

தல அஜித்தின் பைக் ட்ரிப்… வித்தியாசமான பைக் குறித்து அலசும் அவரது ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் தல அஜித்துக்கு அளவில்லாத ரசிகர்கள் கூட்டம் இருப்பது தெரிந்ததே.

மழைகாலத்தில் பயமுறுத்தும் நோய்கள்… குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி?

பருவமழை காலங்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும் டைபாய்டு, டெங்கு, மலேரியா முதற்கொண்டு மஞ்சள் காமாலை வரை பல நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன.