close
Choose your channels

35 நாட்களில் முடிவுக்கு வந்தது ஜோதிகாவின் அடுத்த படம்!

Monday, April 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அதன்பின்னர் 'மகளிர் மட்டும், 'நாச்சியார்', 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் அவர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வந்த படம் ஒன்றில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது 35 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.