இந்த நான்கு பேர்களும் எனது தெய்வங்கள்: ரஜினிகாந்த் வீடியோ

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 90 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகில் உள்ள அனைவரும் கே பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் குறித்த பதிவுகளை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கே பாலச்சந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு இன்று சூப்பர் ஸ்டாராக ஒளிர்ந்திருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் கே.பாலசந்தர் பிறந்தநாளை அடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியபோது ’நான் இன்று பெயரும், புகழும், வசதியுடன் வாழ்வதற்கு காரணமே கே.பாலச்சந்தர் அவர்கள் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார். கே.பாலச்சந்தர் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் சிறிய நடிகனாக அல்லது வில்லன் நடிகராகவே சினிமாவில் இருந்து இருப்பேன் என்றும் பாலச்சந்தரால்தான் தற்போது பெரிய இடத்தை அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடமிருந்த மைனஸ் என்ன என்பதை கண்டுபிடித்து நீக்கியவர் கே.பாலச்சந்தர் என்றும். தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்ததன் மூலமாக மிகப்பெரிய இடத்தை தாம் அடைந்து இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் பல இயக்குனர்களுடன் பணியாற்றி இருந்தாலும் படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் அளவிற்கு கே.பாலச்சந்தரிடம் மிகப்பெரிய கம்பீரம் இருந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும் தமது தாய், தந்தை, சகோதரர் மற்றும் இயக்குனர் கே.பாலச்சந்தர் ஆகிய 4 பேரும் தனது தெய்வங்கள் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

நாய்க்கறிக்கு தடை விதித்த மாநில அரசு!!! போர்க்கொடி தூக்கிய மக்கள்!!!

நாகலாந்தில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாநில இறைச்சி விற்பனையில் நாய்களின் இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி ஏற்படுத்தும் பரபரப்பு சம்பவம்!!!

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு வீடு திரும்பியதும் உயிரிழந்து உள்ளார்.

ஒரே ஒருவரால் 100 பேருக்கு பரவிய கொரோனா: நீலகிரியில் பரபரப்பு

தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது அங்கு ஒரே ஒருவரால் 100 பேருக்கு கொரோனா பரவியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா பாதித்த மனைவியை குழந்தைகளுடன் வீட்டைவிட்டு துரத்திய கணவன்: பெரும் பரபரப்பு

குஜராத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த மனைவியை குழந்தைகளுடன் வீட்டை வெட்டிய கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிகம் பேசமாட்டார், ஆனால் பேச வைப்பார்: விஜய் குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா

தளபதி விஜய் ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த டான்ஸர் என்பதும் அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவின் அனைத்து டான்ஸ் மாஸ்டர்களும் விஜய்யின் டான்ஸ் குறித்து அவ்வப்போது