close
Choose your channels

கே.பாக்யராஜ் வீட்டிலும் நுழைந்த கொரோனா: யார் யாருக்கு பாதிப்பு?

Friday, May 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு திரையுலகினரும் தப்பவில்லை என்பதும் பல திரை உலகினர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் வந்துள்ளனர் என்பதும் ஒரு சிலர் மாண்டுள்ளனர் என்பதையும் அவ்வப்போது வரும் செய்திகளை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தியின்படி பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரிடமும் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரபல இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.