நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்: காரணம் இதுதான்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு தமிழ் திரைஉலகில் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருந்தவர் கே பாக்யராஜ் என்பதும் இயக்குனர் மட்டுமின்றி அவர் இயக்கும் படங்களில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக சுவாமி சங்கரதாஸ் அணி என்று அமைத்து கே பாக்யராஜ் போட்டியிட்டார் என்பதும் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் அணி தோல்வியடைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கே பாக்யராஜ் பரப்பி வந்ததாகவும் இதனால் அவரை நடிகர் சங்கத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று கடந்த சில வாரங்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் கே பாக்யராஜ் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் நடிகர் ஏ.எல். உதயா ஆகிய இருவரும் ஆறு மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கும், புதிய நிர்வாகிகள் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும் செயல்பட்டதால் கே பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

More News

நாயகியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. என்ன விசேஷம்?

நாயகியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

'பொன்னியின் செல்வன்' தமிழில் ரிலீஸ் ஆகின்றதா? கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டர் பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆகிறதா என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்.30 'பொன்னியின் செல்வன்' ரிலீஸ் நாள் மட்டுமல்ல.. த்ரிஷாவுக்கு மேலும் ஒரு மறக்க முடியாத நாள்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

2 வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆன படத்தில் நடித்த நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி சம்மதத்துடன் காதலியுடன் திருமணம்.. 2 மனைவிகளின் டார்ச்சரால் வாலிபர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மனைவி சம்மதத்துடன் தான் காதலித்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபர் ஒருவர் எடுத்த அதிரடி முடிவால் இரண்டு மனைவிகளும் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.