close
Choose your channels

ரஜினிகாந்த் தனது தவறுக்கு தகுந்த விலை கொடுப்பார்: கி.வீரமணி

Monday, January 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு பேட்டி அளித்தாலோ, அல்லது ஒரு விழாவில் பேசினாலோ அந்த பேச்சின் தாக்கம் அடுத்த ஒரு வாரத்திற்குள் இருக்கும் என்பது தெரிந்ததே. அனைத்து தொலைக்காட்சிகளும் அவர் பேசியது குறித்து விவாதம் நடத்துவதும் அனைத்து அரசியல்வாதிகளும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆதரவு தெரிவிப்பதுமாக இருப்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது

அந்த வகையில் சமீபத்தில் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசி ஒருவாரம் ஆன பின்னரும் இன்னும் அந்த நெருப்பு அணையாமல் பற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது குறித்து திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கருத்து தெரிவிக்கும் போது ’ரஜினிகாந்த், பெரியார் குறித்து தவறான தகவலை தெரிவித்ததற்கு தகுந்த விலை கொடுப்பார் என்றும் ஒருவர் தவறாக பேசும் போது அதை மற்றவர்கள் சுட்டிக் காட்டினால் அதை ஏற்றி திருத்திக் கொள்வது தான் சரி என்றும் கூறினார்

மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர் எடுத்த நிலையே இதற்கு சான்றாக இருக்கிறது என்றும் வீரமணி கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.