close
Choose your channels

கணவர் இறந்த 24 நாட்களில் மனைவியும் மரணம்.. பிரபல இயக்குனர் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்..!

Monday, February 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மறைந்து 24 நாட்களில் அவரது மனைவியும் காலமாகி உள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கே விஸ்வநாத் என்பதும் கமல்ஹாசன் நடித்த ’சலங்கை ஒலி’ உள்பட ஒருசில தமிழ் படங்களையும் ஏராளமான தெலுங்கு படங்களையும் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக இயக்குனர் கே விஸ்வநாத் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி நேற்று உயிரிழந்தார். இதனால் தெலுங்கு திரை உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி பல திரைப்படங்களில் கே விசுவநாத் நடித்து உள்ளார் என்பதும் கமல்ஹாசன் அவர்களுக்கு குருவாக இருந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 3ஆம் தேதி கே விஸ்வநாத் காலமானபோது கமலஹாசன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் கணவர் கே.விஸ்வநாத் மறைந்து 24 நாட்களே ஆகியுள்ள நிலையில் அவருடைய மனைவி ஜெயலட்சுமி விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாகவும் தன்னுடைய கணவர் இறப்பால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமி காலமானதாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தெலுங்கு திரை உலக பிரபலங்கள் ஜெயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.