'காலா' படத்தில் வசனம் எழுதிய தாராவி இளைஞன்.

  • IndiaGlitz, [Friday,June 08 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காலா திரைப்படம் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது. குறிப்பாக இந்த படத்தின் வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தின் ஒருசில வசனங்களை நேற்று பார்த்தோம். இந்த படத்தின் பல வசனங்கள் ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் , வலைதளங்களில் பெரும் விவாதத்தை உண்டுபண்ணும் அளவிற்கு பெரும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.

'காலா' படம் தாராவி நிலப்பரப்பை பற்றிய படம் என்பதால் தாராவியில் வாழ்ந்த ஒருவர் இந்தப்படத்திற்கு வசனம் எழுதினால் சரியாக இருக்கும் என்று இயக்குனர் ரஞ்சித் விரும்பியிருக்கிறார். அப்படி தாராவியில் பிறந்து வளர்ந்த மகிழ்நனுக்கு இந்த படத்தில் வசனம் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரஞ்சித். இயக்குனர் ரஞ்சித் தானே நேரடியாக தாராவிக்கு சென்று ஆய்வு செய்த பிறகே திரைக்கதை எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்.

அறிமுக வசனகர்த்தா என்றில்லாமல் முழு சுதந்திரம் கொடுத்து எழுத வாய்ப்புகொடுத்திருக்கிறார். இவரோடு இணைந்து எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும், இயக்குனர் ரஞ்சித்தும் வசனம் எழுதியிருக்கிறார்கள்.

பல மொழி கலந்து வந்திருக்கும் வசனம் சலிப்பூட்டும்படியாக இல்லாமல், தாராவி நெல்லை தமிழ் வாசனையோடு வந்திருப்பதற்கு மகிழ்நனும் ஒரு காரணம். மண்ணை பற்றி பேசுவது மட்டுமில்லாமல், மண்ணிலிருந்தே படைப்பாளிகளை உலகுக்கு அடையாளப்படுத்தும் இயக்குனர் ரஞ்சித்துக்கு அந்த வகையில் ஒரு சபாஷ்.

More News

நான் சொன்னதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார்: 'கோலி சோடா 2' நாயகி 

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோலி சோடா 2' திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சுபிக்ஷா,

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகும் சூப்பர் ஹிட் படத்தின் மூன்றாம் பாகம்

கோலிவுட் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்பது சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது.

ரஜினி ஒரு சகல 'காலா' வல்லவர்: தமிழிசை செளந்திரராஜன் பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் நேற்று வெளியான 'காலா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள

முதல்முறையாக அஜித்துடன் இணையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிந்தது. இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள்,

பாட்டியாக மாறிய பிரபல தமிழ் நடிகை

ராதிகா சரத்குமார் தற்போதும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். திரையில் முன்னணி நடிகர்களுக்கு அம்மா வேடங்களில் நடித்து வரும் ராதிகா தற்போது நிஜத்தில் பாட்டியாக புரமோஷன் ஆகியுள்ளார்.