close
Choose your channels

2.0 புயலிலும் வீழாமல் இருக்கும் 'காற்றின் மொழி'

Friday, November 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக ரஜினி போன்ற பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகும்போது அதற்கு முன்னர் வெளியான படங்களை வாரிசுருட்டி கொண்டு போய்விடும். அந்த வகையில் நேற்று ரஜினியின் '2.0' திரைப்படம் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த அனைத்து படங்களும் கிட்டத்தட்ட தூக்கப்பாட்டுவிட்டன.

ஆனால் கடந்த 16ஆம் தேதி வெளியான ஜோதிகாவின் 'காற்றின் மொழி' திரைப்படம் '2.0' புயலையும் தாக்குப்பிடித்து 75 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'காற்றின் மொழி - புயலுக்கு மத்தியில் தென்றலாய் மக்கள் மனதை கொள்ளை கொண்ட 3-வது வாரம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'மொழி' படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் ராதாமோகன் படத்தில் ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி திரைப்படம் பெரும்பாலான ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.