close
Choose your channels

ஜோதிகாவின் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

Wednesday, May 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க செவந்த வானம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' என்ற படத்தில் நடிக்கவுள்ள ஒப்பந்தமாகியுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 4ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ஒரு புதிய போஸ்டரும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

வித்யாபாலன் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான .'துமாரி சுலு என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படம் ஒரு நடுத்தர வயது பெண்ணின் வாழ்க்கை, வானொலியில் ஆர்ஜேவாக பணியில் சேர்ந்தவுடன் எப்படி மாறுகிறது என்பதை மிக இயல்பாக காட்சிப்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராதாமோகன் இயக்கத்தில் காசிஃப் இசையமைப்பில் மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில் பிரவீண் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.