அவ்வையாருக்கு பின் ஆர்.பி செளத்ரி படம்தான். எதில் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

கடந்த 1953ஆம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் கே.பிசுந்தரம்பாள் நடித்த 'அவ்வையார்' திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அவ்வையார் விநாயகரை நோக்கி தவமிருக்கும்போது, அந்த தவத்தை கலைக்க எதிரிகள் முயற்சி செய்வார்கள். அப்போது 50க்கும் மேற்பட்ட யானைகள் எதிரிகளை அடித்து துரத்தி அவ்வையாரின் தவத்தை காப்பாற்றும். இந்த காட்சிக்காக எஸ்.எஸ்.வாசன் ஐம்பதுக்கும் அதிகமான உண்மையான யானைகளை பயன்படுத்தியிருப்பார். இதனால் இந்த காட்சி பிரமாண்டமாக அமைந்திருக்கும்

இந்நிலையில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கிளைமாக்ஸில் 50க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்ட படம்தான் ஆர்யாவின் 'கடம்பன். இந்த படத்தின் கிளைமாக்ஸ் தாய்லாந்தில் சுமார் 70 யானைகள் சூழ படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு யானைக்கும் சுமார் ரூ.2 லட்சம் செலவு செய்து மிகவும் பிரமாண்டமாக உருவாக்கபட்டுள்ள இந்த படத்தை தயாரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி.செளத்ரி. இந்த படத்தை செளத்ரி இல்லாவிட்டால் இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்கியிருக்க முடியாது என்று இயக்குனர் ராகவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவர் விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து ஆர்யா கூறியபோது, 'இந்த படத்திற்காக நான் கடுமையாக உழைத்ததாக பலர் கூறுகின்றனர். ஆனால் என்னைவிட ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் அதிகமாக உழைத்துள்ளார். யானைகளின் சண்டைக்காட்சிகளை படமாக்கும்போது என்னுடன் கூடவே ஓடிவந்து கேமிராவில் படமாக்கிய சதீஷ்குமார் ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட்டார். யானைகள் ஓடிவரும் இடத்தில் கீழே விழுவது என்பது எந்த அளவுக்கு ரிஸ்க் என்பது தெரியும். அந்த ரிஸ்க்கை எடுத்தவர் அவர்' என்று சதீஷ்குமாருக்கு புகழாரம் சூட்டினார்.

More News

ரஜினி, அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பாகுபலி'

கோலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக புக் ஆகியிருப்பதா

அஜித் பிறந்த நாளில் ஸ்பெஷல் காட்சியின் திட்டங்கள்

தல அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் தற்போதே அட்வான்ஸாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்...

இசை நிகழ்ச்சிக்கு சென்ற எஸ்.பி.பிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தனது பாடலை எஸ்பிபி பாடக்கூடாது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தெரிந்ததே.

மைனா கணவரின் தற்கொலைக்கு யார் காரணம்? கடிதத்தில் பரபரப்பு தகவல்

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் தெரியாமல் இருந்தது. ஆனால் சற்று முன்னர் தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில் அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதியுள்ளதாகவும் தெரிகிறது.

மணிரத்னம்-கார்த்தியின் 'காற்று வெளியிடை'. திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகில் சீனியர் இயக்குனர்கள் பலர் தற்போதைய இளைஞர்களின் டிரண்டுக்கு மாற முடியாததால் திரையுலகில் இருந்து ஒதுங்கிவிட்ட நிலையில் இன்னும் ஃபீல்டில் இருக்கும் ஒரே பழம்பெரும் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் மட்டுமே.