கோலிவுட்டின் கருணை உள்ளத்தால் 'காதல்' விருச்சிககாந்துக்கு குவியும் பட வாய்ப்புகள்

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' படத்தில் நடித்த 'விருச்சிககாந்த் என்ற பாபு' சினிமா வாய்ப்பு இலலாத நிலையில் கோவிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தார் என்பதையும் அவரை சமீபத்தில் தீனா மற்றும் மோகன் ஆகியோர் மீட்டு அவருக்கு தேவையான அடிப்படை தேவைகளை வழங்கி உதவி செய்தனர் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். மேலும் விருச்சிககாந்துக்கு திரையுலகினர் மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தீனா மற்றும் மோகன் வெளியிட்டிருந்த வீடியோ குறித்தும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. சமுத்திரக்கனி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் விருச்சிகாந்துக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்றில் இருந்தே படப்பிடிப்புக்கு செல்லவுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் 25 இயக்குனர்கள் விருச்சிககாந்துக்கு வாய்ப்பு தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விருச்சிககாந்துக்கு தற்போது தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டு அவருக்கு உடைகள் மற்றும் ஆண்ட்ராய்டு போன் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெகுவிரைவில் கோலிவுட் திரையுலகில் நல்ல நிலைமைக்கு வருவார் என்றும் திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More News

கேளிக்கை வரி குறித்து தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜிஎஸ்டி வரி 28% மற்றும் தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரியை திரைத்துறையினர் கட்ட வேண்டிய நிலை உள்ளது...

செளந்தர்யா ரஜினி விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'விஐபி 2' படத்தின் இயக்குனருமான செளந்தர்யா, கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்....

மனைவி புகார் எதிரொலி: தாடி பாலாஜி மீது கொலைமிரட்டல் வழக்கு

கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்த நிலையில் கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் நித்யா புகார் ஒன்றை அளித்தார்.

பஞ்சாயத்து தேர்தலுக்காக பக்காவாக தயாராகும் விஜய்

இளையதளபதி விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அரசியலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வரும் நிலையில் விஜய் அதிரடியாக அரசியல் களத்தில் இறங்க தயாராகிவிட்டார்.

'வேலைக்காரன்' படத்தை முந்தியது மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதமுள்ளது.