பாலாஜி சக்திவேலின் அடுத்த பட ஹீரோவாகும் 'கடுகு' நடிகர்

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

விக்ரம் நடித்த 'சாமுராய்', பரத் நடித்த 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி, லிங்குசாமி தயாரித்த 'வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல் தற்போது 'ரா ரா ராஜசேகர்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் பாலாஜி சக்திவேல், பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் விஜய்மில்டனுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
ஆம் விஜய்மில்டனின் 'ரஃப் நோட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜய்மில்டன் தயாரிப்பது மட்டுமின்றி ஒளிப்பதிவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் ஹீரோவாக விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்மில்டன் இயக்கிய 'கடுகு' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த விரிவான தகவல் இன்னும் ஒரிருநாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

More News

நடிகை சமந்தா திருமண தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகரும் நடிகர் நாகார்ஜூனா-அமலா தம்பதியின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் இவ்வருட இறுதியில் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சீயான் விக்ரமின் 'சாமி 2' படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவநட்சத்திரம்' மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

ஒன்றா இரண்டா? '2.0' படத்தில் எத்தனை பாடல்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

'வேலைக்காரன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

அணியின் முடிவை அஸ்வின் புரிந்து கொள்வார். விராத் கோஹ்லி

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்டான் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொள்ளாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது...