close
Choose your channels

தேனிலவை தள்ளி வைத்த காஜல் அகர்வால்: இதுதான் காரணம்!

Monday, November 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையை சேர்ந்த கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

திருமணம் முடிந்ததும் வெளிநாட்டில் தேனிலவு கொண்டாட திட்டமிட்டிருந்த காஜல் அகர்வால் திடீரென தனது தேனிலவை தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ என்ற படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சாரியா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து ’ஆச்சாரியா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சிரஞ்சீவியுடன் காஜல் அகர்வால் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் முதலில் அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகுதான் ஹனிமூன் செல்ல காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிரஞ்சீவி படத்தில் நடிப்பதற்காக தனது தேனிலவை காஜல் அகர்வால் தள்ளிவைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.