பெஹல்காம் தாக்குதல் இந்து முஸ்லீம் பிரச்சனை அல்ல.. அஜித், விஜய், சூர்யா நாயகியின் பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், ’பெஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்து முஸ்லிம் பிரச்சனை அல்ல. சிலர் இதை மதப் பிரச்சனையாக்க விரும்புகின்றனர். உண்மையில் இது பயங்கரவாதம் மற்றும் மனித நேயத்துக்கு இடையிலான போர்.
மதத்தின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை என்பது அதிக பயத்தையும் பிரிவு உணர்வையும் உருவாக்கும். நாம் அனைவரும் ஒரே இனம் என்ற உணர்வுடன் முன்பை உடன் அதிக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
’பெஹல்காம் பிரச்சனை ஒரு தீவிரவாத பிரச்சனை’ என்றும், அதை இந்து முஸ்லிமாக மாற்ற முயற்சி செய்தது குறித்து தைரியமாக பேசிய காஜல் அகர்வாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments