close
Choose your channels

பள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை

Saturday, March 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் நாட்டு மக்களின் பொழுதுபோக்கை கணக்கில் கொண்டு இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ராமாயணம் ஒளிபரப்பப்படும் என்று தூர்தர்ஷன் நேற்றே அறிவித்தது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு வெளியான முதல் எபிசோடை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. நடுத்தர வயது உள்ளவர்கள் பலர் தங்கள் பள்ளி காலத்தில் தாங்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்த ராமாயணத் தொடரை மீண்டும் பார்த்தது குறித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியதாவது: பள்ளிப்பருவத்திற்கு மீண்டும் சென்று விட்டேன். நாங்கள் குடும்பத்துடன் ராமாயணம் மற்றும் மகாபாரதம் தூர்தர்ஷனில் பார்த்த காட்சி என் கண்முன் வருகிறது. நாங்கள் வாரந்தோறும் ராமாயணம் சீரியலை தவறாமல் பார்ப்போம். தற்போது மீண்டும் இந்த தொடரை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி இந்திய பெருங்காப்பியம் ஒன்றை இன்றைய குழந்தைகளும் அறிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்

காஜல் அகர்வால் மட்டுமின்றி மேலும் பலர் இந்த தொடரை மீண்டும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.