close
Choose your channels

பிரபல தமிழ் நடிகையின் மெழுகுச்சிலை: நாளை சிங்கப்பூரில் திறப்பு விழா!

Tuesday, February 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிங்கப்பூரில் ‘மேடம் துசாட்ஸ்’ என்றா அருங்காட்சியகத்தில் உலகின் முக்கிய நபர்களின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை இங்கு நாளை திறக்கப்பட உள்ளது. இந்த சிலையை திறந்து வைப்பதற்காக காஜல் அகர்வால் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை தனதுசமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

தென்னிந்திய நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலுக்குத்தான் முதல்முறையாக  இந்த அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காஜல் அகர்வால் தற்போது இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள ‘பாரீஸ் பாரீஸ்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.