நான் ஏன் 'விஐபி 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கஜோல் கூறிய முக்கிய காரணம்

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த கஜோல்' 'விஐபி 2' படத்தில் நடிக்க நான் முதலில் தயங்கினேன். தமிழ் டயலாக் என்னால் பேச முடியாது என்று மறுத்தேன். ஆனால் தனுஷும் செளந்தர்யாவும் கூறிய ஒரே ஒரு காரணத்தால்தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது என்னவெனில் இந்த படத்தில் நான் பேசும் டயலாக்கும் 50% ஆங்கிலத்தில் இருந்தது என்பது தான். மீதியுள்ள தமிழ் வசனங்களை தனுஷின் உதவியால் ஆங்கிலத்தில் எழுதி வைத்து சமாளித்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் கஜோலின் கேரக்டர் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, 'இயக்குனர் செளந்தர்யா என்னுடைய கேரக்டர் குறித்து எதுவும் வெளியே சொல்லக்கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். ஆனாலும் இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கேரக்டர் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.

தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அவ்வையாருக்கு பின் ஆர்.பி செளத்ரி படம்தான். எதில் தெரியுமா?

கடந்த 1953ஆம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் கே.பிசுந்தரம்பாள் நடித்த 'அவ்வையார்' திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அவ்வையார் விநாயகரை நோக்கி தவமிருக்கும்போது, அந்த தவத்தை கலைக்க எதிரிகள் முயற்சி செய்வார்கள்...

ரஜினி, அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பாகுபலி'

கோலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக புக் ஆகியிருப்பதா

அஜித் பிறந்த நாளில் ஸ்பெஷல் காட்சியின் திட்டங்கள்

தல அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் தற்போதே அட்வான்ஸாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்...

இசை நிகழ்ச்சிக்கு சென்ற எஸ்.பி.பிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தனது பாடலை எஸ்பிபி பாடக்கூடாது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தெரிந்ததே.

மைனா கணவரின் தற்கொலைக்கு யார் காரணம்? கடிதத்தில் பரபரப்பு தகவல்

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் தெரியாமல் இருந்தது. ஆனால் சற்று முன்னர் தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில் அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதியுள்ளதாகவும் தெரிகிறது.