குழல் இனிது, யாழ் இனிது எல்லாம் கிடையாது: எஸ்பிபி குரல் தான் இனிது: கலைப்புலி எஸ் தாணு!

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள், எஸ்பிபியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

குழல் இனிதா? யாழ் இனிதா? என்று கூறினால் அதற்கு எஸ்பிபி அவர்களின் குரல் தான் இனிது என்று சொல்லலாம். அவர் ஒரு பெரிய இசைக் கலைஞர் மட்டும் என்று உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளில் உள்ளவர்களும் அவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அத்தனை மொழி பேசுபவர்களும் அவரது பாடல்களை ரசித்து கேட்பார்கள்.

ஒரு செகண்டில் ஓராயிரம் மேஜிக் பண்ணக்கூடிய ஒரு அசாத்திய பாடகர். அசாத்திய திறமை உள்ளவர். நான் தயாரித்த ‘தையல்காரன்’ படத்திற்கு அவர் இசையமைக்கும் போது அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக எனக்கு தெரிந்தது.

நான் தயாரித்த ஒரு படத்தில் அத்தனை பாடங்களையும் நீங்கள் பாடுங்கள் என்று நான் கூறியபோது, இல்லை எல்லோருக்கும் பிரித்துக் கொடுங்கள், என்னை மாதிரி எத்தனையோ கலைஞர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் வாழ்வு வேண்டும் என்று தனக்கு வந்த வாய்ப்புகளையும் சக பாடகர்களுக்கு பிரித்து கொடுத்தார். தான் மட்டும் வாழாமல் எல்லாரும் வாழ வைக்க வேண்டும் என்ற ஒரு உண்மையான ஏழை பங்காளன். உலகத்திலேயே சில குரல்கள் உருட்டும், மிரட்டும், ஆனால் இவரது குரல் உருக்கும், ஜெயிக்கும், கொஞ்சும், அழும். அவரது புகழ் வாழ்க.

இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.

More News

எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு, ஆனா இதுக்கு அளவே இல்லை; இளையராஜா

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்

ஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்!!!

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை சட்டவிரோதமாக ஒரு கும்பல் விற்க முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்!!!

சீனாவில் 700 ஆண்டு பழமையான ஓவியம் ஒன்று ஏலம் விடப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மறக்க முடியாது பாலு சார், மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் ஆகியோர் வெளியிட்ட வீடியோ குறித்து பார்ப்போம்

கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: சிவகார்த்திகேயன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்