மதுராந்தகம் தியேட்டரை ஜொலிக்க வைத்த கலைப்புலி தாணு : 'PS 2' படத்திற்காக சிறப்பு ஏற்பாடு..!

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஏராளமான ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தை தனது மதுராந்தகம் தியேட்டரில் ரிலீஸ் செய்யும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அந்த தியேட்டரை ஜொலிக்க வைக்கும் அளவுக்கு மின்விளக்குகளால் அலங்கரித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் கட்டவுட்டுகள் மின்விளக்குகளால் ஜொலித்து வரும் நிலையில் மதுராந்தகம் தியேட்டரை ஸ்பெஷல் ஆக கலைப்புலி யஸ் தாணு அவர்கள் அலங்கரித்துள்ளார். இதனை அந்த பகுதியில் உள்ள ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

More News

போன்ல டைம் டிராவலா? புதுசா இருக்கே.. 'மார்க் ஆண்டனி' டீசர்..!

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

'லால் சலாம்' படத்தின் 50 நிமிட காட்சிகளை பார்த்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதனை அடுத்து படக்குழுவினர்களுக்கு அவர்

3 மணி நேர 'விடுதலை' படத்தை பார்க்க வேண்டுமா? இதோ ஒரு சூப்பர் அறிவிப்பு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை

உன் இறப்பால் நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம்: குஷ்புவின் இரங்கல் பதிவு..!

நடிகை குஷ்பு வீட்டில் செல்லமாக வளர்ந்த நாய் குட்டி இறந்து விட்டதை அடுத்து உன் இறப்பால் நாங்கள் மனம் உடைந்து போய் உள்ளோம் என்று தனது சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார்.

எச்சரிக்கையாக இருங்க.. இது மிகப்பெரிய மோசடி.. ரசிகர்களை அலர்ட் செய்த கவர்ச்சி நடிகை..!

பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் எனது பெயரில் பண மோசடி நடப்பதாகவும் எனவே தனது ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அலர்ட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.