close
Choose your channels

அமைச்சர் அமித்ஷாவுக்கு கலைப்புலி எஸ்.தாணு எழுதிய கடிதம்!

Friday, January 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தமிழக அரசு திரையரங்குகளுக்கு 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கிய அரசாணை வெளியிட்டது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அரசாணை தற்போது திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு இந்த அரசாணைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று நீதிமன்றங்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 100% இருக்கைகள் குறித்த அரசாணையை திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவரான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் திரையரங்குகளில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறைந்தபட்சம் வரும் பொங்கல் திருநாளில் உள்ள விடுமுறை நாட்களிலாவது 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே திரையுலகமும் திரையரங்கு உரிமையாளர்களும் நலிந்து இருக்கும் நிலையில் 100% இருக்கை அனுமதி என்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கடிதத்தை அடுத்து மத்திய அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos