close
Choose your channels

மீண்டும் ஒரு பிரமாண்டமான படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு

Friday, February 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என்றாலே பிரம்மாண்டம் என்பதும் பிரம்மாண்டம் என்பதற்கு மறு பெயர் தாணு அவர்கள் தான் என்பதும் தமிழ் திரையுலகினர் தெரிந்ததே. ஒரு திரைப்படத்தை எப்படி பிரமாண்டமாக விளம்பரம் செய்து அந்த படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்ற சூத்திரம் தெரிந்த ஒரே தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என்பது தமிழ் திரையுலகினர் அனைவரும் அறிந்தது தான் 

இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்லால், பிரபு நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ’சிறைச்சாலை’ என்னும் பிரமாண்டமான படைப்பை தமிழில் ரிலீஸ் செய்த கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தற்போது மீண்டும் இதே கூட்டணியில் உருவான ‘மரைக்காயர்’ என்ற படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறார்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், பிரபு, அர்ஜூன், சுனில்ஷெட்டி ஆகியோர் நடித்த ’மரைக்காயர்’ திரைப்படத்தை தமிழகத்தில் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவுள்ளார். தாணு அவர்களின் பிரமாண்டமான விளம்பரத்தில் இந்த படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.