சூர்யா-வெற்றிமாறன் 'வாடிவாசல்' டிராப்பா? கலைப்புலி எஸ்.தாணு விளக்கம்!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக பாண்டியராஜன் இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என்பதும் வெற்றிமாறன் சூரி நடிக்கும் படத்தை இயக்க சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சூர்யா-வெற்றிமாறன் இணையும் ’வாடிவாசல்’ திரைப்படம் டிராப் என்ற வதந்தி பரவியது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கலைப்புலி எஸ் தாணு அவர்களின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கம் ஆரம்பித்த மர்ம நபர்கள் சிலர் அந்த டுவிட்டர் பக்கத்தில் ’வாடிவாசல்’ திரைப்படம் டிராப் என்று பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல் வலம் வரும் வாகை சூடும்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி: 'மாஸ்டர்' மாளவிகாவுக்கு ரசிகரின் கமெண்ட்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கலன்று ஓடிடி அல்லது திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் இல்லை

10 வருஷத்துக்கு முன்னால எப்படி இருக்கேன்: த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை!

தமிழ் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா போன்ற ஒருசில நடிகைகளை தவிர பெரும்பாலான நடிகைகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசமாக இருப்பார்கள்.

'மாஸ்டர்' முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டை என்கிட்ட யாரும் கேட்காதீங்க: அர்ச்சனா கல்பாதி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் பலமுறை உறுதி செய்து இருந்தனர்.

ஓடிடி ரிலீஸ் குறித்து 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்கில் தான் வெளியாகும்

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்!!!

கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கு வடகொரிய அரசு மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறது.