அட்டகாசமாக வெளியான ஓவியாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. பத்து படத்தில் நடித்திருந்தால் கூட கிடைக்காத புகழை பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒருசில நாட்களில் ஓவியா பெற்றுவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் இருந்தாலும் பிக்பாஸ் என்றால் அனைவருக்கும் ஓவியாவின் ஞாபகம் தான் வரும். அவரது பெயரால் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி இன்னும் டிரெண்டில் உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் ஓவியா ஒப்புக்கொண்ட படங்களில் ஒன்று 'களவாணி 2'. ஓவியா அறிமுகமான 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் ஹீரோ விமல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் 'களவாணி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு உதவி செய்துள்ளார். விமல், ஓவியா அட்டகாசமாக உள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ஓவியாவின் ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றனர்.

More News

'அவன் இவன்' படப்பிரச்சனை: ஆர்யாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அவன் இவன்'. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை

படப்பிடிப்பு தளத்தில் நாசரின் நல்ல முயற்சி

பொதுவாக சினிமாக்காரர்களுக்கு படப்பிடிப்பு நடத்த இடம் கொடுத்தால் அந்த இடத்தையே அசுத்தமாக்கிவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பலர் படப்பிடிப்பு நடத்த அனுமதிப்பதில்லை.

முழுநேர அரசியல்வாதியாக மாறும் பிரபல நடிகர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை ஆகியவை காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

'தமிழ்ப்படம் 2' ரிலீஸ் தேதியை 'பயங்கரமான நாளாக கூறியுள்ள இயக்குனர்

சிவா நடிப்பில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளின் பாலியல் தொழில் குறித்த புதிய தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்ததாக தொழிலதிபர் கிஷான் என்பவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யபப்ட்டு வருகின்றனர்.