close
Choose your channels

'களவாணி 2' படத்தின் தடை குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தை தயாரிப்பது எந்த அளவுக்கு சிரமமோ அதைவிட சிரமம் அந்த படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் செய்வது என்பது சமீபகாலத்தில் கோலிவுட் தயாரிப்பாளர்களின் அனுபவமாக உள்ளது.

அந்த வகையில் இம்மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த விமல், ஓவியா நடித்த 'களவாணி 2' திரைப்படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீதனலட்சுமி நிறுவனத்தின் உரிமையாளர் குமரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தபோது, 'களவாணி 2' படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சற்குணம் உள்பட படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.