close
Choose your channels

கள்ளக்குறிச்சி பட்டாசு கடையில் தீ விபத்து… பலர் உடல்கருகி உயிரிழந்த அவலம்!

Wednesday, October 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு கடை ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சங்கராபுரத்தில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் நேற்றுமாலை 7 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. முதலில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து பின்னர் கடையின் நாலாபுறமும் பற்றிக்கொண்டு எறிய, அருகில் இருந்த செல்போன் கடை மற்றும் பேக்கரி கடையிலும் தீ மளமளவென பரவியிருக்கிறது. இந்நிலையில் பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலிண்டர்கள் தீயினால் வெடித்து சிதறி அங்கு வேலைப்பார்த்த ஊழியர்கள் மற்றும் அருகில் பூ விற்றுக்கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கோர விபத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி அறிவித்து இருக்கிறார். கள்ளக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் பொது மக்களிடையே கடும் பரபரப்பு மற்றும் அச்சம் ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.