கள்ளக்குறிச்சி பட்டாசு கடையில் தீ விபத்து… பலர் உடல்கருகி உயிரிழந்த அவலம்!

  • IndiaGlitz, [Wednesday,October 27 2021]

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு கடை ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சங்கராபுரத்தில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் நேற்றுமாலை 7 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. முதலில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து பின்னர் கடையின் நாலாபுறமும் பற்றிக்கொண்டு எறிய, அருகில் இருந்த செல்போன் கடை மற்றும் பேக்கரி கடையிலும் தீ மளமளவென பரவியிருக்கிறது. இந்நிலையில் பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலிண்டர்கள் தீயினால் வெடித்து சிதறி அங்கு வேலைப்பார்த்த ஊழியர்கள் மற்றும் அருகில் பூ விற்றுக்கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கோர விபத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி அறிவித்து இருக்கிறார். கள்ளக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் பொது மக்களிடையே கடும் பரபரப்பு மற்றும் அச்சம் ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கமல், இளையராஜா, பாராதிராஜாவுக்கும் பால்கே விருது: பிரபலத்தின் வேண்டுகோள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்

வண்ணம் கொண்ட வெண்ணிலவு… வாணிபோஜனின் அழகியப் புகைப்படங்கள்!

சின்னத்திரை நட்சத்திரமாக ஜொலித்து தற்போது சினிமாவில் நுழைந்திருக்கும்

டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க… சில எளிய டிப்ஸ்!

உடல்எடையை குறைக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு கனவு.

விருதுபெற்ற அனைவரையும் வாழ்த்திய இயக்குனர் இமயம்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்கள் ஆகிய அனைவருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது சமூக வலைதளத்தில்

உங்களின் வாழ்த்து என்னை மிகவும் நெகிழவைத்தது: கலைப்புலி தாணுவின் பதிவு!

உங்களின் வாழ்த்த என்னை நெகிழ வைத்து விட்டது என கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்த்து குறித்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.