தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு மிகப்பெரிய விருது: தமிழக அரசு அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,August 15 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை தாங்கள் அணிந்திருந்த சேலையில் முடிச்சுப்போட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டறை நீர்த்தேக்கத்தில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென 4 பேர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனை அடுத்து அவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த போது கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், மற்றும் ஆனந்தவள்ளி ஆகிய மூன்று பெண்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் குதித்து இளைஞர்களை காப்பாற்றினார்கள்.

அவர்கள் தாங்கள் தான் அணிந்திருந்த சேலையை முடிச்சாக போட்டு வாலிபர்களை நோக்கி வீசினர். அந்த சேலையை பிடித்து கொண்டு இரண்டு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர் என்பதும், இருவர் துரதிஷ்டவசமாக தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தங்கள் உயிரையும் மானத்தையும் பொருட்படுத்தாமல் வாலிபர்களின் உயிரை காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு தமிழக அரசு தற்போது மிகப்பெரிய விருதுகளை அறிவித்துள்ளது. இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மூவருக்கும் இந்த விருதை அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எஸ்பிபி சிகிச்சைக்கு அரசு உதவ தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது தெரிந்தது 

ஒருவிரலை தூக்கி காண்பிக்கும் எஸ்பிபியின் புகைப்படம்: பிரபல நடிகர் டுவீட்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

எழுந்து வா பாலு, உனக்காக காத்திருக்கின்றேன்: இசைஞானியின் உருக்கமான வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மீண்டு வருவான், காத்திருக்கின்றேன்: எஸ்பிபி குறித்து பிரபல இயக்குனர்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த உருக்கமான வேண்டுகோள்

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.