close
Choose your channels

கொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

Friday, May 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு பலியாகி வரும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் இயக்குநர்கள் தாமிரா மற்றும் கேவி ஆனந்த் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பழம்பெரும் நடிகர் திலக் கொரோனாவால் உயிரிழந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கல்தூண்’. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பதால் இவரது பெயர் கல்தூண் திலக் என்று மாறிவிட்டது. மேலும் இவர் ’ஆறிலிருந்து அறுபது வரை’ ’பேர் சொல்ல ஒரு பிள்ளை’ ’தாயில்லாக் குழந்தை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மட்டுமின்றி இவர் சில படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்தூண் திலக் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.