மீண்டும் ஒரே மேடையில் ரஜினி-கமல்

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் ரஜினி, கமல் ஒரே மேடையில் தோன்றிய நிலையில் இன்று நடைபெற்ற எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை அடுத்து எம்ஜிஆர் நடிக்க திட்டமிட்டிருந்த படம் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ'. ஆனால் எம்ஜிஆர், தீவிர அரசியலில் இடம்பெற்று தமிழக முதல்வரகவும் பொறுப்பேற்றதால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

எம்ஜிஆரின் இந்த நிறைவேறாத கனவை நிறைவேற்றும் வகையில் முழுக்க முழுக்க அனிமேஷனில் எம்ஜிஆரை வைத்து தயாரிக்க ஐசரி கணேஷ் முன்வந்துள்ளார். இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி அருள்மூர்த்தி இயக்கவுள்ளார். இந்த படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. ரஜினிகாந்த் கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ரஜினி, கமல் மட்டுமின்றி எம்ஜிஆருடன் நடித்த மூத்த நடிகைகளான லதா உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர்.

ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியல் பிரவேச அறிவிப்பை அடுத்து ஒரே மேடையில் மீண்டும் தோன்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

More News

ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார்: திவாகரன் திடுக்கிடும் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் தேதி டிசம்பர் 5ஆம் தேதி காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கமல்ஹாசனுடன் அரசியல் கூட்டணி குறித்து ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்: வைரமுத்து இரங்கல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ்.படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவர் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது சடலம் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்சியை விட்டு நீக்கிய கார் டிரைவருக்காக தர்ணா செய்த தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த ஆண்டு எம்ஜிஆர் அம்மா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியில் அவருடைய கணவர் மாதவனுக்கு இருந்த மரியாதையைவிட அவரது கார் டிரைவரான ராஜாவுக்கு இருந்தது

ஒரே நேரத்தில் மூன்று இரண்டாம் பாக படங்களில் பணிபுரியும் ஸ்டண்ட் சில்வா

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாக சீசன் கொடிகட்டி பறக்கின்றது. 2.0, விஸ்வரூபம் 2 முதல் மாரி 2 வரை சுமார் பத்து இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாகி வருகிறது.