எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன்.. பவதாரிணி மறைவு குறித்து விஷால்

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

கடந்த சில வாரங்களாக எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன், இது வாழ்க்கை மீதான என் தவறான புரிதலை உணர்த்துகிறது என நடிகர் விஷால், பாடகி பவதாரிணி மறைவு குறித்து பதிவு செய்துள்ளார். அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:

அன்பு பவதா, நான் இதை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன், உங்களை இளையராஜாவின் மகளாகவோ, யுவனின் சகோதரியாகவோ பார்த்தை விட, என்னுடைய சொந்த சகோதரி போலவே எண்ணினேன். உங்களை போன்ற ஒரு நல்ல ஆத்மா எங்களை விட்டு வெகு சீக்கிரமாக பிரிந்துவிட்டது.

கடந்த சில வாரங்களாக எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன், இது வாழ்க்கை மீதான என் தவறான புரிதலை உணர்த்துகிறது, உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாக பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

நடிகர் சூரிக்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் இருக்கும் அதிர்ச்சி வீடியோ..!

நடிகர் சூரி சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த நிலையில் கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ராம்ராஜ் வேட்டிகள், சட்டைகள் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக ரிஷப் ஷெட்டி நியமனம்..!

ராம்ராஜ்   வேட்டிகள் சட்டைகள் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக நடிகர் ரிஷப் ஷெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் - சேகர் கம்முலா படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

மோகன்லாலின் 'நேரு' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

'அயலான்' படம் பார்த்துவிட்டு ரஜினி சொன்ன ஒரு வார்த்தை: சிவகார்த்திகேயன் பெருமிதம்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு சொன்ன ஒரு வார்த்தை தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.