close
Choose your channels

பாலகுமாரன் குடும்பத்துக்கு கமல் நேரில் ஆறுதல்

Monday, May 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 15ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு எழுத்துலகம் மற்றும் திரையுலகம் ஆகியவற்றுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்டது. மறைந்த பாலகுமாரன் அவர்களுக்கு ரஜினிகாந்த், சிவகுமார் உள்பட திரையுலகமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அரசியல் தலைவர்களும் பாலகுமாரன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாலகுமாரனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன் அவர் மரணம் அடைந்த தினத்தன்று நெல்லை, குமரி மாவட்டத்தில் கட்சி பணியில் இருந்ததால் அவரால் பாலகுமாரனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் இன்று பாலகுமாரன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கமல்,

பாலகுமாரனின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.