close
Choose your channels

இந்து தீவிரவாதம் பேச்சு: முன் ஜாமீன் மனுதாக்கல் செய்த கமல்

Wednesday, May 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்து தீவிரவாதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நேற்று அவர் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதனால் கமல்ஹாசன் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரி, கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக தன் மீதான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி முன், கமல் சார்பில் முறையிடப்பட்டது.

ஆனால் தற்போது நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால் தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தால், அதனை பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து கமல் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.