ஸ்ரீதேவியை கட்டியணைத்து மலரும் நினைவுகளில் மூழ்கிய கமல்

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை கமல்ஹாசனுக்கு அவருடன் பல திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதேவி வழங்கினார். ஸ்ரீதேவியிடம் விருதை பெற்று அவரை கட்டியணைத்து கொண்ட கமல், பின்னர் பேசியபோது, 'ஸ்ரீதேவியிடம் இருந்து இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மலரும் நினைவுகள் வருகின்றன’ என்று கூறினார். கமல்ஹாசனுடன் ஸ்ரீதேவி, 'சிகப்பு ரோஜாக்கள்', மிண்டும் கோகிலா, குரு, மூன்றாம் பிறை, சத்மா,16 வயதினிலே, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதே விழாவில் ஸ்டைலிஷ் நடிகை விருது தீபிகா படுகோனுக்கும், ஸ்டைலிஷ் நடிகர் விருது ஷாகித் கபூருக்கும், பெண் சாதனையாளர் விருது நடிகை ரேகாவுக்கும், ஸ்டைல் சூப்பர் ஸ்டார் விருது அமிதாப்பச்சனுக்கும் வழங்கப்பட்டது.

More News

கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது: கமல்ஹாசன்

கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது என்றும், சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது; செய்துதான் காட்ட முடியும்.

'பத்மாவத்' பிரச்சனை குறித்தும் சித்தார்த்தும், சித்தார்த் அபிமன்யூவும் கூறிய கருத்து

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு பின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உடுமலை சங்கர் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் மரணம்

நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிப்ரவரி 21 முதல் தொடங்கும் பயணத்திட்டத்தின் பெயர்: கமல் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.

ரஜினிகாந்த் முதலில் டெல்லியில் இருந்துதான் தொடங்க வேண்டும்: அமீர்

ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ள நிலையில் அவரது ஆன்மீக அரசியல் குறித்து திரையுலகினர்களும் அரசியல்வாதிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்.