ஊழல் அரசியல்வாதிகளுக்கு கமல்ஹாசனின் தைரியமான விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,July 27 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை பரபரப்புடன் கூறி வருகிறார். கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்களை பெரும்பாலானோர் வரவேற்றாலும், ஒருசிலர் கமல், ஆளும் கட்சியின் ஊழலை மட்டுமே சுட்டிக்காட்டுவதாகவும், பிற ஊழல் கட்சிகளுடன் நட்புடன் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு கமல் தற்போது தன்னுடைய டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளதுள்ளார். என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும், சாடாத பிழை. கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழல்களையும் களைய முயல்வதென் கடமை. உமதும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்னொரு பதிவில், 'நான் ஊழலுக்கு எதிரானவன். எல்லோரும் பயப்படுவதைப்போல நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. கிளர்ச்சியாளர்கள் எப்போதும் சாவுக்கும் தோல்விக்கும் அஞ்சமாட்டார்கள். நீங்கள்?' என்று பதிவு செய்துள்ளார்.

More News

'நானா தானா வீணா போனா' சூர்யாவின் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சூர்யாவின் பிறந்த நாளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது....

மாஸ் படம்: விக்ரம் வேதா படத்திற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்த வெள்ளி அன்று வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக நல்ல வசூலை பெற்று வருகிறது...

ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு. டிஐஜி ரூபாவுக்கு நோட்டீஸ்

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சிறப்பு சலுகைகள் வழங்கியதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ் மீது புகார் கூறியிருந்தார்.

திடீரென பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர்: பெரும் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார்

சிம்புவின் 'பில்லா 3' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் நடித்த 'பில்லா' படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பில்லா 3' படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது.