எனது பெயரில் வன்முறை அறிவுரை. உடனே நிறுத்துக. கமல் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கூறியதாக ஒரு இணையதளத்தில் சில வன்முறை கருத்துக்கள் பதிவாகியுள்ளது. இந்த கருத்துக்கள் தன்னுடையது அல்ல என்றும், இதுபோல் தன்னுடைய பெயரில் வரும் கருத்துக்களை அந்த இணையதளம் உடனே நிறுத்த வேண்டும் என்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு தளத்தில் என் பெயரால் எழுப்பப்ப படும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல. போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது. இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என்று அந்த இணையதளத்திற்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் 'யாரையும் மரியாதைக்குறைவாக பேசுவதை நம் இயக்கத்தார் செய்யாதிருக்க வேண்டும். நம்மைப்பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் தருவது நம் கடமை, பதிலடி கொடுப்பது வன்முறை' என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News

இளைஞர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடத்தும் அடுத்த போராட்டம்

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது அதைவிட முக்கிய பிரச்சனையான நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் களமிறங்கவுள்ளார்.

நெடுவாசல் போராட்டம் குறித்து நடிகர் சங்கத்தின் முக்கிய முடிவு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் போராடிய போராட்டத்திற்கு இணையாக தற்போது நெடுவாசல் போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

ஸ்டிக்கர் ஒட்டிய அன்புமணி ராமதாஸ் கைது

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழக அரசு இன்னும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஒருசில டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை.

புதிய சங்கம். பிரபல தமிழ் நடிகை அதிரடி அறிவிப்பு

சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்திய திரையுலகையே உலுக்கிய நிலையில் இன்னும் ஒருசில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படுத்தினர்....

குஷ்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

முன்னாள் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் இன்று  அதிரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது...