முதல்முறையாக முதல்வரின் ராஜினாமா குறித்து பேசிய கமல்!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

கடந்த சில மாதங்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளம் மூலம் அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை அமைச்சர்கள் ஊழல் குறித்து மட்டுமே பேசி வந்த கமல்ஹாசன் தற்போது முதல்வரின் ராஜினாமா குறித்தும் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் பதிவு செய்த இரண்டு டுவீட்டுகளில், ' எனது குறிக்கோள் தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதே. என்னுடைய குரலுக்கு வலுச் சேர்க்கும் துணிவு யாருக்கெல்லாம் இருக்கிறது?. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதற்கான கருவி மட்டுமே. கருவியின் முனை மழுங்கிவிட்டால் வேறு கருவிகளைக் கண்டறிவோம். ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும், லெல்வோம்' என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் இன்னொரு டுவீட்டில், 'அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால், தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தும், எந்த அரசியல் கட்சியும் முதலமைச்சரின் ராஜினாமாவைக் கோராதது ஏன்?.என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்று முக்கிய தொலைக்காட்சிகளில் அரசியல் தலைவர்கள் நேரலையாக விவாதம் செய்யும் அளவுக்கு இந்த டுவீட்டுக்கள் காரணமாக இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றாரா குத்தாட்ட நடிகை?

பிக்பாஸ் வீட்டில் இருந்து சக்தி வெளியேறவுள்ளார் என்பதை கடந்த சனிக்கிழமை அன்றே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்...

மணிரத்னம் பட நாயகியாகும் பிரபல நடிகரின் வாரிசு

'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வுப்பணி நடைபெற்று வருகிறது...

'கரகாட்டக்காரன்' புகழ் சண்முகசுந்தரம் காலமானார்

பழம்பெரும் குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்...

விவசாயிகளை காப்பாற்றுங்கள்: ஜி.வி.பிரகாஷின் சுதந்திரதின செய்தி

இந்தியாவின் 71வது சுதந்திர தினம் இன்று நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றியுள்ளனர்...

சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியது ஏன்? சிம்பு விளக்கம்

நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியேறுவதாக நேற்று அறிவித்துள்ளார்...